Home இலங்கை ஊழல்வாதிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

ஊழல்வாதிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

by admin

ஊழல்வாதிகளுடன் இணைந்து அரசாங்கம் ஆட்சியமைத்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது கணவரான விஜயகுமாரதுங்கவின் நினைவுச் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் என்ன ஆணையை வழங்குகின்றார்களோ அதன்படி ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்த அவர் தற்போதைய அரசாங்கம் ஊழல்வாதிகளை கைது செய்யாமையினாலேயே மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் அரசாங்கத்தினைத் தோற்கடிக்கத் தயங்க மாட்டார்கள் எனவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More