Home இலங்கை தனிமையில் இருந்த மூதாட்டி சடலமாக மீட்பு – கொலையென சந்தேகம்

தனிமையில் இருந்த மூதாட்டி சடலமாக மீட்பு – கொலையென சந்தேகம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனிமையில் வாழ்ந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். மூதாட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றது. மானிப்பாய் கட்டுடை பகுதியை சேர்ந்த த. இரத்தின தேவி (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

அது தொடர்பில் தெரியவருவதாவது ,

குறித்த மூதாட்டி தனிமையிலையே வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக மூதாட்டியின் நடமாட்டத்தை காணாததை அடுத்து அயலவர்கள் இன்று திங்கட்கிழமை காலை மூதாட்டியை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அதன் போது மூதாட்டி வீட்டினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். அதனை அடுத்து அயலவர்கள் மானிப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு , பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட வீட்டின் கூரை ஓடுகள் கழற்றப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் , அதனால் ஓடுகளை கழட்டி வீட்டினுள் உட்புகுந்த கொள்ளையர்கள் மூதாட்டியை கொலை செய்து விட்டு கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More