Home உலகம் ரஸ்யாவின் மற்றுமொரு வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

ரஸ்யாவின் மற்றுமொரு வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ரஸ்யாவின் மற்றுமொரு வீராங்கனையும் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தென்கொரியாவில் தற்போது நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் ரஸ்ய வீர வீராங்கனைகள் பங்கேற்று வருகின்ற நிலையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  பாப்ஸ்லேடர் நடேஸ்டா செர்ஜீவா ( Bobsledder Nadezhda Sergeeva ) என்ற வீராங்கனையே இவ்வாறு ஊக்க மருந்து பயன்படுத்தினார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீராங்கனை தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து ஒன்றைப் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அலெக்ஸாண்டர் குருசேனிற்ஸ்கி என்ற ரஸ்யவீரர் ஊக்க மருந்து பயன்படுத்திய காரணமாக போட்டியில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More