Home உலகம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு – நோர்வே முதலிடம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு – நோர்வே முதலிடம்

by admin


தென்கொரியாவின் நடைபெற்று வந்த 23 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. 23வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8-ம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

இதில் 93 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டியின் போது ரஸ்ய வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டது நிருபிக்கப்பட்டதனை தொடர்ந்து அந்நாட்டின் ஒலிம்பிக் கமிட்டிக்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்த நிலையில் அந்நாட்டின் வீரர்கள் தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கினர்.

இந்த போட்டியில் ஐஸ் ஹொக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உள்பட 15 வகையான விளையாட்டுகள் ஆண் பெண் இருபாலருக்கும் இடம்பெற்றது. இதில் இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், சிலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் நோர்வே அணி 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து ஜெர்மனி 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 31 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடம் பிடித்தது. மூன்றாவது இடத்தை பெற்றுள்ள கனடா 11 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அமெரிக்கா நான்காவது இடத்தையும், நெதர்லாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கிய ரஸ்ய வீரர்கள் 2 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 13-வது இடத்தை பிடித்தது. ரஸ்யாவை சேர்ந்த இரண்டு வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் அமெரிக்கா, வடகொரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே-இன், அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் மகளும், ஆலோசகருமான இவான்கா டிரம்ப், வடகொரிய சிரேஸ்ட அதிகாரியான கிம் யோங் சோல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் ரஸ்ய கொடி அணிவகுப்பில் கலந்துகொள்ள தடை விதிப்பட்டுள்ளதையடுத்து, ரஸ்யவருர்கள் ஒலிம்பிக் கொடியை ஏந்தியவாறு அணுவகுப்பில் கலந்துகொண்டனர். அதிகார்ப்பூர்வமாக ஒலிம்பிக் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதும் வானவெடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டதுடன் விழா நிறைவடைந்திருநடதமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More