Home இந்தியா குளியல் தொட்டியில் மூழ்கியமையாலேயே ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது- டுபாய் தடயவியல் காவல்துறை

குளியல் தொட்டியில் மூழ்கியமையாலேயே ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது- டுபாய் தடயவியல் காவல்துறை

by admin



பிரபல நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கியமை காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டு  மரணமடைந்திருப்பதாக டுபாய் தடயவியல் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தடயவியல் சான்று ஸ்ரீ தேவி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த அறிக்கையில்; ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் இருந்த போது மூழ்கியதால் இறந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குற்ற நோக்கமோ, கிரிமினல் குற்றமோ இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் அவரது ரத்தத்தில் அல்கஹோல் கலந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இவரது மரணம் இயற்கையானது அல்ல என்றும் விபத்தாகவே மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் டுபாய் காவல்துறை  தடவியல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More