Home இந்தியா நீட் தேர்வுக்கான வயது எல்லைக்கு தடை

நீட் தேர்வுக்கான வயது எல்லைக்கு தடை

by admin

நீட் பொது நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான உச்ச வயது எல்லையை டெல்லி உயர்நீதிமன்றம் நீக்கி உள்ளதுடன் இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்புக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.

மருத்துவப் கல்வியைப் பெறுவதற்காக நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கென வயது எல்லையாக பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயம் செய்திருந்தது. இந்த உச்சஎல்லை வயது அறிவிப்பினை தடை விதிக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நிர்ணயிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டமைக்கு மாறாக தற்போது வயது எல்லை வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நீட் தேர்வு வயது எல்லை வரம்பு தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இதன்மூலம் பொதுப் பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் நீட் நுழைவுத் தேர்வை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More