Home இலங்கை கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு..

கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியிலும் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 வது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியே இவ் பாதுகாப்பு இன்று காலைமுதல் வழங்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியின் கரைச்சிப் பகுதில் அமைந்துள்ள இவ் ஐந்து பள்ளிவாசல்களையும் கரைச்சியில் உள்ள 249 முஸ்லீம் குடும்பங்கள் வழிபாட்டுக்காக பாவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More