Home சினிமா மீண்டும் திரையில் ஜோடி சேரும் நாக சைதன்யா – சமந்தா!

மீண்டும் திரையில் ஜோடி சேரும் நாக சைதன்யா – சமந்தா!

by admin


கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட நாக சைதன்யா – சமந்தா இருவரும் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணைய இருக்கின்றனர்.  நாக சைதன்யா பிரபல நடிகர் நாகர்ஜூனனின் மகனாவார்.  சமந்தா – நாக சைதன்யா இருவரும் இணைந்து ‘யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ முதலிய தெலுங்குப் படங்களில் நடித்தனர். ஒன்றாக நடித்தபோது இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து இருவரும் திருணம் செய்து கொண்டனர்.

2014ஆம் ஆண்டில் வெளியான ‘ஆட்டோ நகர் சூர்யா’ படம்தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம். இதனையடுத்து ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய ஷிவ நிர்வனா இயக்கும் புதிய படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதேவேளை சமந்தா நடிப்பில் தற்போது ‘இரும்புத்திரை’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன.  அத்துடன், ‘சீமராஜா’, ‘நடிகையர் திலகம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘யு டர்ன் ரீமேக்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More