Home சினிமா இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கும் பரியேறும் பெருமாள்!

இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கும் பரியேறும் பெருமாள்!

by admin


இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில்  மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் – கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படம் கவனத்தை ஈர்க்கும் படமாக அமையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மைய காலத்தில் கவனத்தை ஈர்க்கும் படங்களை தந்த பா. ரஞ்சித் இந்தப் படத்தை தயாரிக்கின்றார்.

மதயானைக் கூட்டம் படத்தில் நாயகனாக நடித்த கதிர் இந்தப் படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் விக்ரம் வேதா படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்தும் கவனத்தை ஈர்த்தவர். அத்துடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப் படத்திற்கு இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – ஸ்ரீதர், படத்தொகுப்பு ஆகிய பணிகளை புரிந்துள்ளனர்.  இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக இருந்த மாரி செல்வராஜ் இப் படத்தை இயக்கியுள்ளார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதை தொகுப்பு, ‘மறக்க நினைக்கிறேன்’ தொடர் ஆகிய நூல்களை எழுதியவர்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் குறிப்பிடுகையில் “இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட படம். ‘பரியேறும் பெருமாள்’ என்பது குலதெய்வம் பெயர். தென்தமிழக கிராமங்கள், நகரங்கள் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் பிரிவினை படிநிலை உள்ளது. அது உருவாக்கும் பெரும் தாக்கத்தை உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ இருக்கும்” என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More