Home இலங்கை வழமைக்கு திரும்புகிறது கண்டி – ஊரடங்கு சட்டம் நீக்கம்…

வழமைக்கு திரும்புகிறது கண்டி – ஊரடங்கு சட்டம் நீக்கம்…

by admin

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை  ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளின் பாதுகாப்புக்காக காவற்துறை  விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த இனவாத வன்முறைகள் அனைத்தும் நேற்று முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 4 ஆம் திகதி இரவு முதல் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் உருவான வன்முறைகள் மற்றும் பதற்றநிலை நேற்றுக் காலை 6 மணியாகும் போது முற்றாக கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்பட்டதால், கண்டி மாவட்டம் மீண்டும் வழமைக்கு திரும்பி வருகின்றது.

 வன்முறைகளின் சேத விபரங்கள் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் குறித்த பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக  நேற்று முதல் ஆரம்பமாகின.

 எவ்வாறாயினும் கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக அங்கு தொடர்ந்தும் 2000 காவற்துறையினரும்  750 காவற்துறை விஷேட அதிரடிப்படையினரும் ( STF.) 2500 இராணுவ வீரர்களும்  600 கடற்படை வீரர்களும் 30 விமானப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை  ஊடகப் பேச்சாளர் காவற்துறை  அத்தியட்சர் ருவன் குணசேகரவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவும் தெரிவித்தனர்.

காவற்துறை  தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இராணுவ தளபதி மேகேஷ் சேனநாயக்கவினால் மத்திய மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரால் ருக்மல் டயஸ் ஏற்கனவே நியமிக்கப்ப்ட்டிருந்த நிலையில், அவருக்கு மேலதிகமாக கட்டளை அதிகாரங்களை முன்னெடுக்கும் விதமாக மேஜர் ஜெனரால் நிசங்க ரணசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்ப்ட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர்  பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

 நேற்று காலை 6.00 மணிக்கு பின்னர் கண்டி மாவட்டத்தின் எந்த பகுதியிலும் குறிப்பிடத்தக்க எந்த வன்முறைகளும் பதிவாகாத நிலையில், நேற்று கண்டி நகரின் வர்த்தக நடவடிக்கைகள்  வழமைக்கு திரும்ப ஆரம்பித்தன. நேற்று முன் தினம்  காலை  முதல் இரவு வரை கட்டுகஸ்தோட்டை, பூஜாபிட்டிய,  அம்பதென்ன, அக்குரன உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகள் பதிவான நிலையில், நேற்று முன் தினம் இரவோடிரவாக காவற்துறையினர் வன்முறையாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அத்துடன் சமூக வலைத்தளங்கள் முர்றாக முடக்கப்ப்ட்ட நிலையில் வன்முறையாளர்களின் தகவல் பறிமாற்றம், ஒருங்கிணைப்பு பாதிக்கப்பட்ட நிலையில் மேலதிக வன்முறைச்சம்பவங்கள் தவிர்க்கப்பட்டு கண்டி முழுவதும் காவற்துறை, இரானுவ கட்டுப்படடுக்குள் கொன்டுவரப்ப்ட்டது. இதனால் நேற்று முழுவதும் அங்கு அமைதி நிலைமை நிலவியது.

எனினும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பலர், தமது உறவினர் வீடுகளிலும் பொது இடங்களிலும் தஞ்சமடைந்திருந்த நிலைமையையே நேற்றும் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக கட்டுகஸ்தோட்டை – நுகவல, என்டருதென்ன எனும் கிராமத்தில் வன்முறைகளால் பாதிக்கப்ப்ட்ட பல  குழும்பங்கள் நிவாரணங்கள் எதுவுமின்றி அக்கிராமத்தின் பொது இடமொன்றில் தங்கியிருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளன.  அங்கு தங்கியுள்ளோரில் கர்ப்பிணிகள், குழந்தைகளும் உள்ளதாகவும் இவர்கள் நேற்று முன் தினம் மார்ச் 7 ஆம் திகதி தககுதல்களால் பாதிக்கப்ப்ட்டவர்கள் எனவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More