Home இந்தியா 6 வயது சிறுவனை பிழைக்க வைத்த ராகவா லோரன்ஸ்

6 வயது சிறுவனை பிழைக்க வைத்த ராகவா லோரன்ஸ்

by admin


ராகவா லோரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் 6 வயது சிறுவன் ஒருவருக்கு இருதய சத்திர சிகிச்சை நடத்தி அவரை உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்.  ராகவா லோரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதுடன் இதய கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இருதய சத்திர சிகிச்சை செய்யவும் உதவி செய்து வருகிறார்.

இந்தநிலையில் அண்மையில் ; பிரதீப் என்ற 6 வயது சிறுவனுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளநிலையில் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று சிறுவன் உயிர் பிழைத்துள்ளார்.இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்க பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் இதய கோளாறு இருக்கும், வசதி இல்லாத குழந்தைகளுக்கு உதவ தயாராக இருக்கிறேன் எனவும் தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகவா லோரன்ஸ், தெரிவித்துள்ளார்.

ராகவா லோரன்ஸ் அறக்கட்டளை மூலம் இதுவரை 142 குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை பெற்று குணம் அடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More