Home இலங்கை இலங்கையில் 490 வது காவல்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

இலங்கையில் 490 வது காவல்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் 490 வது காவல்நிலையமாக கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று(14) அக்கராயன்குளம் காவல நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் றோசான் பெர்னாண்டோ, கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிக்; காவல்துறைமா அதிபர் மகேஷ் வெலிகன்ன மற்றும் வட மாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் கணேசநாதன் ஆகியோரால் இன்று காலை பத்துமணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது

இவ் காவல் நிலையமானது யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்றப்பட்டதில் இருந்து காவலரானாக இயங்கி வந்தது இக் காவலரண் மிகவும் சிறப்பாக இயங்கியமையால் இது காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது

அக்கராயன் காவல் நிலையைப் பொறுப்பதிகாரியாக எம்.எம்.டி.என் சத்துரங்க காவல்துறை தலைமை அலுவலகத்தால் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர் கடந்த காலத்தில் தர்மபுரம் பொறுப்பதிகாரியாக செயற்பட்டதுடன் இவர் சிறந்த காவல்துறை சேவைக்காக இவர் பலமுறை கௌரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More