Home இலங்கை ஒஸ்டின் பெர்ணான்டோ தலைமையில் முகப்புத்தக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நாளை கலந்துரையாடல்

ஒஸ்டின் பெர்ணான்டோ தலைமையில் முகப்புத்தக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நாளை கலந்துரையாடல்

by admin


ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவின் தலைமையில் முகப்புத்தக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நாளைய தினம் (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் மிக விரைவில் முகப்புத்தக ; சமூக ஊடகத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிக கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நாட்டில் அமைதியின்மையை மீண்டும் உருவாக்குவதற்கு இடமளிக்காது மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், இத்தகைய செயற்பாடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More