Home இலங்கை பங்களாதேஸ் அணி வீரர்களின் ஓய்வு அறை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை:

பங்களாதேஸ் அணி வீரர்களின் ஓய்வு அறை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை:

by admin


ஆர்.பிரேமதாச மைதானத்தில் பங்களாதேஸ் கிரிக்கெட்அணி வீரர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையின் கண்ணாடியிலான கதவுகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஐ.சி.சி ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெறும் முத்தரப்பு சுதந்திரகிண்ணப் போட்டியின் நேற்று இடம்பெற்ற இறுதி லீக் ஆட்டத்தில் பங்களாதேஸ் அணி வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது

இதனையடுத்து பங்களாதேஸ்வீரர்கள் தமது வெற்றியை கொண்டாடிய வேளை அவர்கள் தங்கியிருந்த ஓய்வு அறை சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலேயே விரிவான விசாரணைகளை ஐ.சி.சி ஆரம்பித்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More