Home இலங்கை இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து :

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து :

by admin

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக கூட்டுறவை பலமாக முன்னெடுப்பதற்கு பாகிஸ்தானிய பிரதமர் ஷஹீத் கான் அப்பாஸி உறுதியளித்தார்.  பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பாகிஸ்தானிய பிரதமருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (23) பிற்பகல் இஸ்லாமாபாத் நகரிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இரு தலைவர்களுக்கிடையிலான சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச பயிற்சி நிறுவனத்திற்கும் பாகிஸ்தானின் வெளிநாட்டு சேவை நிறுவனத்திற்குமிடையே ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவும் பாகிஸ்தானின் வெளிநாட்டு செயலாளரும் கைச்சாத்திட்டனர்.

பாகிஸ்தானின் தேசிய கொள்கைகள் தொடர்பான தேசிய பாடசாலைக்கும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரும் பாகிஸ்தானின் தேசிய கொள்கைகள் தொடர்பான தேசிய கல்லூரியின் பீடாதிபதியும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தமொன்றில் பாகிஸ்தானின் மாநில கூட்டுறவு இராஜாங்க அமைச்சின் செயலாளரும் பாகிஸ்தானின் இலங்கை உயர் ஸ்தானிகரும் கைச்சாத்திட்டனர்.

இதே நேரம் பாகிஸ்தான் – இலங்கை வர்த்தக, முதலீட்டு நட்புறவு சங்கத்தினால் இரு நாடுகளுக்கும் இடையில் நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்பான அன்பளிப்பொன்றை ஜனாதிபதி அவர்கள் பாகிஸ்தானிய பிரதமரிடம் கையளித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More