Home இலங்கை பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை – SLFPயின் மத்திய குழு கூடுகிறது…

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை – SLFPயின் மத்திய குழு கூடுகிறது…

by admin

பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்து ஆராய ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் இந்த வாரம் இடம்பெறும் எனவும் ஜனா­தி­ப­தி­யுடன் ஆழ­மாக கலந்­து­ரை­யாடி பிர­தமர் விவ­கா­ரத்தில் தீர்­மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரிவித்துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வந்­துள்ள நிலையில் எதிர்­வரும் மாதம் 4 ஆம் திகதி குறித்த பிரே­ரணை வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிலைப்­பாடு என்­ன­வென வின­விய போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார்.

மேலும்  கருத்து வெளியிட்ட அவர்,  பிர­த­ம­ருக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக நெருக்­கடி நிலை­மைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அதற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியே பிரதான காரணமாகும்.  அவர்­களின் கொள்­கைகள், செயற்­பா­டுகள் என்­ப­வற்றில் பாரிய நெருக்­கடி நிலை­மைகள் உள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் சில உறுப்­பி­னர்­களே மீண்டும் தமது நிலைப்­பாட்­டினை மாற்­றி­ய­மைத்து பிர­த­ம­ருக்கு எதி­ராக செயற்பட உள்ளதாகவும், ஊட­கங்­களில் அறிய முடி­கின்­றது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக நாம்  இன்­னமும் எந்­த­வித இறுதித் தீர்­மா­ன­தையும் எடுக்­க­வில்லை. பிரே­ர­ணையில் கைச்­சாத்­தி­டு­வது குறித்து தனித்து தீர்­மானம் எடுக்க முடி­யாது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சியின்  மத்­திய குழுக் கூட்­டத்­தி­லேயே பிரேரனை குறித்து  தீர்­மா­னிக்­கப்­படும்.  ஜனா­தி­பதி பாகிஸ்­தா­னிய விஜயத்தை  முடித்­துக்­கொண்டு ஜனாதிபதி  இலங்­கை திரும்பியுள்ளார். எனவே அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் இந்த வாரத்தில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More