Home இலங்கை பழைய வடிவில் 23 அடி உயரத்தில் தியாக தீபம் திலீபனின் தூபி அமைக்கப்படும்…

பழைய வடிவில் 23 அடி உயரத்தில் தியாக தீபம் திலீபனின் தூபி அமைக்கப்படும்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் , உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர் இன்று ஆராய்ந்தனர்.

இந்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்தி 1987ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவாக நல்லூரில் தூபி அமைக்கப்பட்டது. யுத்தகாலத்தில் அந்தத் தூபி அரச படைகளால் அழிக்கப்பட்டது. அதனை மீளவும் அதே வடிவில் சீரமைப்பது தொடர்பிலேயே இன்று ஆராயப்பட்டது.

இந்த நிலையில் பழைய வடிவில் 23 அடி உயரத்தில் அனைவரும் புனிதம் பேணும் வகையில் தியாக தீபம் திலீபனின் தூபி அமைக்கப்படும் என யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்தார். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திலீபனின் நினைவு வாரத்தில் புதிய தூபியைத் திறக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More