Home உலகம் சிரியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – துருக்கி, ஈரான் மற்றும் ரஸ்யா

சிரியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – துருக்கி, ஈரான் மற்றும் ரஸ்யா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிரியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என துருக்கி, ஈரான் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. சிரியாவில் துரித கதியில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாடுகளும் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய விவகாரம் தொடர்பில் துருக்கியின் தலைநகர் அங்காராவில் ரஸ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கூடி ஆராய்ந்துள்ள நிலையில்  சிரியாவில் அமெரிக்காவின் இராணுவ பிரசன்னம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதேவேளை, சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினர் அகற்றிக் கொள்ளப்பட உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More