Home இலங்கை ஜேர்மன் பிரஜை மீது துப்பாக்கி சூடு பங்காளியின் திட்டமிட்ட செயலா?

ஜேர்மன் பிரஜை மீது துப்பாக்கி சூடு பங்காளியின் திட்டமிட்ட செயலா?

by admin

கொஸ்கொடை இந்துருவ பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றுக்கு எதிரில் கார் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஜேர்மன் பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கொஸ்கொடை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த ஜேர்மன் பிரஜை களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் நடந்துள்ளது. இந்துருவ பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது வர்த்தக பங்காளியான ஜேர்மன் பிரஜையுடன் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட பின் நிர்மாணிக்கப்பட்டு வரும் தனது விடுதிக்கு செல்ல காரை நிறுத்திய போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் ரி.56 ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். சம்பவத்தில் ஹொட்டல் உரிமையாளரும் காயமடைந்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More