Home இலங்கை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் அரசியலில் ஈடுபட மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் அரசியலில் ஈடுபட மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீண்டும் பொறுப்பேற்க போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் அரசியலில் ஈடுபட மக்கள் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுமதியை வழங்கியிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டியது கட்சியின் தற்போதைய தலைமைத்துவத்தின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த முன்னாள் அமைச்சர்கள், தன்னை சந்தித்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்’ கொள்கைகளை பாதுகாத்து நாட்டை அபிவிருத்தி செய்தேன். எனினும் இவை அனைத்தையும் மறந்து விட்டு, நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழித்து நாட்டை கொள்ளையிட்டேன் என கட்சியின் தற்போதைய தலைமை காண்பிக்க முயற்சித்து வருகின்றது. இன்னும் அந்த முயற்சிகளை கைவிடவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More