Home இலங்கை காபூலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்….

காபூலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


காபூலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு அரசாங்கம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் காயமடைந்தவர்கள் துரித கதியில் குணமடைவதற்கு இறைவணை பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More