Home இந்தியா விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் காயம்- தீயை அணைக்கும் முயற்சி நடைபெறுகின்றது

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் காயம்- தீயை அணைக்கும் முயற்சி நடைபெறுகின்றது

by admin

விருதுநகரில் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த வெடிவிபத்தால் வெடிவிபத்தால் வரிசையாக அருகே உள்ள கட்டிடங்களில் தீ பிடித்துள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பட்டாசு தொழிற்சாலைக்கு சென்றுள்ளனர் எனவும் ; உள்ளே வெடிமருந்து இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலையில் வேலை பார்த்த ஒரு ஊழியர் மட்டும் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் ஆலைக்கு உள்ளே இன்னும் எத்தனை ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து விவரம் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More