Home இலங்கை மீண்டும் புலிப்பூச்சாண்டி காட்டும் சிங்கள பத்திரிகை

மீண்டும் புலிப்பூச்சாண்டி காட்டும் சிங்கள பத்திரிகை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உயிரிழந்த விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்காக பிரித்தானியா, கனடா, சுவிஸர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர் விடுதலைப் புலிகள் வடக்கில் உள்ள தமது ஆதரவாளர்களுக்கு பெருமளவில் பணத்தை அனுப்பி வைத்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மற்றும் மாவீரர் துயிலும் இல்லங்களில் இந்த நினைவு தின நிகழ்வுகளை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காக புலம்பெயர் நாடுகளில் வாழும் புலிகள் சுற்றுலாப் பயணிகள் போல் வடக்கிற்கு வந்துள்ளனர்.

சுவிஸர்லாந்து நாட்டில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலத்தில் இலங்கைக்கு பயணம்; செய்ய அங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் பெருமளவில் ஜெனிவா மற்றும் சூரிச் நகரங்களில் உள்ள விமான சேவை அலுவலங்களில் விமான பயணச்சீட்டுக்களை பெற்றுள்ளனர்.

அத்துடன் கனடாவின் டொரோன்டோவில் இருந்தும் ஈழ ஆதரவாளர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அந்த சிங்கள பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More