Home இலங்கை படகில் தாயகம் திரும்பிய அகதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்…

படகில் தாயகம் திரும்பிய அகதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்…

by admin

இடம்­பெ­யர்ந்து அக­தி­களாக  இந்­தியாவுக்­குச் சென்று பட­கில் தாய­கம் திரும்­பிய 12 பேரும் பட­கோட்­டி­கள் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக  காவற்துறையினர்  தெரி­வித்­ததுள்ளனர். 12 வரு­டங்­க­ளின் பின்­னர் அவர்­கள் இவ்­வாறு திரும்­பி­யுள்­ள­னர்.

காங்­கே­சன்­து­றைக் கடற்­ப­ரப்­பில் வைத்து   நேற்று அதி­காலை படகுடன் கைது செய்­யப்­பட்­ட அவர்­கள் காங்­கே­சன்­து­றைப் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

3 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 12 பேரும் திரு­கோ­ண­ம­லை­யைச் சேர்ந்­த­வர்­கள். அவர்­க­ளில் 4 பர் சிறார்­கள். சுமார் 4 லட்­சத்து 50 ஆயி­ரம் இலங்கை ரூபா செலுத்தி நாடு திரும்­பி­ய­தாக அவர்­கள் விசா­ர­ணை­யில் தெரி­வித்­துள்­ள­னர்.

அவர்­கள் காங்­கே­சன்­து­றைக் கடற்­ப­டை­யி­ன­ர்  கைது செய்யும் ­போது வட­ம­ராட்சி இன்­பர்­சிட்­டி­யைச் சேர்ந்­த­வர்­க­ளது பட­கில் இரண்டு  பட­கோட்­டி­க­ளுடன் காணப்பட்டுள்ளனர்.  அவர்­க­ளும் கைது செய்­யப்­பட்­டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

திரு­கோ­ண­ம­லை­யைச் சேர்ந்­த­ இவர்கள்  திரு­ந­க­ரில் இருந்து 2006ஆம் ஆண்டு போர் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து மன்­னார் ஊடாக இந்­தி­யா­வுக்­குச் சென்­றி­ருந்­த­னர். அங்கு புதுக்­கோட்டை முகா­மில் இருந்­த­னர். திரு­ம­ண­மா­ன­தும் முகா­மி­லி­ருந்து வெளி­யேறி வசித்து வந்­த­னர். தற்­போது 3 குடும்­பங்­க­ளாக  உள்ள இவர்கள்
வீசா இன்­றி­யி­ருந்­த­தால் பணம் செலுத்­தியே திரும்ப வேண்­டி­யி­ருந்­த­தாக  காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்­தி­யா­வில் வாழ்­வா­தா­ரத்­துக்­கான வரு­மா­னம் அற்ற நிலை­யில்   கடந்த 24ஆம் திகதி பட­கில் புறப்­பட்­டுள்­ள­னர். கரையை அண்­டிய பகு­தி­யில் 8 நாள்­கள் தங்கியிருந்து  நேற்­று­முன்­தி­னம் அங்­கி­ருந்து புறப்­பட்டு நேற்று அதி­காலை காங்­கே­சன்­து­றையை சென்ற­டைந்­த­னர். அவர்­க­ளு­டன் 9 மாதக் கைக்­கு­ழந்­தை­யும் தனியாக  அழைத்து வரப்­பட்­டுள்­ளார்.

குழந்­தை­யின் தாய் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கடந்த 24ஆம் திகதி விமா­னம் மூல­மாக நாடு திரும்­பி­யுள்­ளார். அதற்கு முன்­னர் அவர் தனது குழந்­தையை அவர்­க­ளி­டம் பொறுப்­புக் ­கொ­டுத்­து­விட்டு சென்றுள்­ளார். அவர் யாழ்ப்­பா­ணம் புத்­தூ­ரைச் சேர்ந்­த­வர் எனவும்,  விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­வதாகவும், காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More