Home இலங்கை படகில் தாயகம் திரும்பிய அகதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்…

படகில் தாயகம் திரும்பிய அகதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்…

by admin

இடம்­பெ­யர்ந்து அக­தி­களாக  இந்­தியாவுக்­குச் சென்று பட­கில் தாய­கம் திரும்­பிய 12 பேரும் பட­கோட்­டி­கள் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக  காவற்துறையினர்  தெரி­வித்­ததுள்ளனர். 12 வரு­டங்­க­ளின் பின்­னர் அவர்­கள் இவ்­வாறு திரும்­பி­யுள்­ள­னர்.

காங்­கே­சன்­து­றைக் கடற்­ப­ரப்­பில் வைத்து   நேற்று அதி­காலை படகுடன் கைது செய்­யப்­பட்­ட அவர்­கள் காங்­கே­சன்­து­றைப் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

3 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 12 பேரும் திரு­கோ­ண­ம­லை­யைச் சேர்ந்­த­வர்­கள். அவர்­க­ளில் 4 பர் சிறார்­கள். சுமார் 4 லட்­சத்து 50 ஆயி­ரம் இலங்கை ரூபா செலுத்தி நாடு திரும்­பி­ய­தாக அவர்­கள் விசா­ர­ணை­யில் தெரி­வித்­துள்­ள­னர்.

அவர்­கள் காங்­கே­சன்­து­றைக் கடற்­ப­டை­யி­ன­ர்  கைது செய்யும் ­போது வட­ம­ராட்சி இன்­பர்­சிட்­டி­யைச் சேர்ந்­த­வர்­க­ளது பட­கில் இரண்டு  பட­கோட்­டி­க­ளுடன் காணப்பட்டுள்ளனர்.  அவர்­க­ளும் கைது செய்­யப்­பட்­டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

திரு­கோ­ண­ம­லை­யைச் சேர்ந்­த­ இவர்கள்  திரு­ந­க­ரில் இருந்து 2006ஆம் ஆண்டு போர் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து மன்­னார் ஊடாக இந்­தி­யா­வுக்­குச் சென்­றி­ருந்­த­னர். அங்கு புதுக்­கோட்டை முகா­மில் இருந்­த­னர். திரு­ம­ண­மா­ன­தும் முகா­மி­லி­ருந்து வெளி­யேறி வசித்து வந்­த­னர். தற்­போது 3 குடும்­பங்­க­ளாக  உள்ள இவர்கள்
வீசா இன்­றி­யி­ருந்­த­தால் பணம் செலுத்­தியே திரும்ப வேண்­டி­யி­ருந்­த­தாக  காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்­தி­யா­வில் வாழ்­வா­தா­ரத்­துக்­கான வரு­மா­னம் அற்ற நிலை­யில்   கடந்த 24ஆம் திகதி பட­கில் புறப்­பட்­டுள்­ள­னர். கரையை அண்­டிய பகு­தி­யில் 8 நாள்­கள் தங்கியிருந்து  நேற்­று­முன்­தி­னம் அங்­கி­ருந்து புறப்­பட்டு நேற்று அதி­காலை காங்­கே­சன்­து­றையை சென்ற­டைந்­த­னர். அவர்­க­ளு­டன் 9 மாதக் கைக்­கு­ழந்­தை­யும் தனியாக  அழைத்து வரப்­பட்­டுள்­ளார்.

குழந்­தை­யின் தாய் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கடந்த 24ஆம் திகதி விமா­னம் மூல­மாக நாடு திரும்­பி­யுள்­ளார். அதற்கு முன்­னர் அவர் தனது குழந்­தையை அவர்­க­ளி­டம் பொறுப்­புக் ­கொ­டுத்­து­விட்டு சென்றுள்­ளார். அவர் யாழ்ப்­பா­ணம் புத்­தூ­ரைச் சேர்ந்­த­வர் எனவும்,  விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­வதாகவும், காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More