Home இந்தியா இசைத்தமிழர் இருவர் – பாட புத்தகத்தில் இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான்

இசைத்தமிழர் இருவர் – பாட புத்தகத்தில் இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான்

by admin


இந்தியாவின் தமிழகத்தில் உள்ள பாடசாலைகளுக்கான தரம்11ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் புத்தகத்தில் இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரது சாதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் கொண்டுவரப்பட்ட பாடத்திட்ட நூலில் “இசைத்தமிழர் இருவர்” என்ற தலைப்பில், இசையமைப்பாளர்கள்  இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புதிய பாடத்திட்ட நூல்களை அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அறிமுகமாகின. இதில், 11-ம் வகுப்புக்குரிய ‘பொது தமிழ்’ பாடப்புத்தகத்தில் ‘இசைத் தமிழர் இருவர்’ என்ற தலைப்பில், ஒரு பாடம் உள்ளது.

‘சிம்பொனி தமிழர்’ என்ற பெயரில் திரைப்பட இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா குறித்த பாடமும் ‘ஒஸ்கர் தமிழர்’ என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் குறித்த பாடமும் இடம் பெற்றுள்ளன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More