Home இலங்கை போர்த்துகேய யானைகள்அரங்க (The Elephant’s Theater) கலைஞர்களின் ஓவியகண்காட்சியும், நாடகஆற்றுகையும்

போர்த்துகேய யானைகள்அரங்க (The Elephant’s Theater) கலைஞர்களின் ஓவியகண்காட்சியும், நாடகஆற்றுகையும்

by admin

போர்த்துகேய யானைகள் ,அரங்க ,The Elephant’s Theater) ,கலைஞர்களின்,ஓவியகண்காட்சியும்,நாடகஆற்றுகையும்
போர்த்துக்கல்லிலிருந்து வருகை தந்துள்ளயானைகள் அரங்கு என்ற நிறுவனத்தின் கலைஞர்கள் கலை,கலாசார,பண்பாட்டு,சமூகஒருங்கிணைப்புநோக்கில் கிழக்குபல்கலைக்கழகத்தின் சுவாமிவிபுலானந்தாஅழகியற் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்துசெயற்பட்டுவருகின்றனர். இதன் இணைப்பாளர்களாககலாநிதி.சி.nஐயசங்கர் மற்றும் கலாநிதிராகல் ஆகியோர் தமதுபங்களிப்பினைசெலுத்திவருகின்றனர்.

இக்கலைஞர்களால் முதற்கட்டநிகழ்வானது ஜோஸ் சரமாகோஎன்றநோபல் பரிசுபெற்றநாவலாசிரியரின் வரிகளைமையப்படுத்தியபல்லி(The Lizard )என்றதலைப்பில் ஓவியக்கண்காட்சிஒன்று 08.05.2018 அன்று சுவாமிவிபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கு முன்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் விரிவுரையாளர்களும்,மாணவர்களும் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தயானைகள் அரங்குநிறுவனத்தினர் பல்லி(The Lizard )என்றதலைப்பில் ஒருநாடகஆற்றுகையைவழங்கவுள்ளனர். இந்நிகழ்வானதுபுதன் கிழமைமாலை 05 மணிக்கு இராசதுரைஅரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது போர்த்துக்கேய கலைஞர்களுடைய அறிமுகஉரையுடன் ஆரம்பமாகும். பின்னர் பறங்கிய இசைக்கலைஞர்களுடைய இசைஆற்றுகை நிகழ்த்தப்பட,தொடர்ந்து போர்த்துக்கேய கலைஞர்கள் தமது நாடக ஆற்றுகையை நடத்துவர். இவ்ஆற்றுகையினை தொடர்ந்து கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போர்;த்துகேயயானைகள் அரங்குகலைஞர்கள், நாடகத்துறைமாணவர்களுடன் இணைந்து வியாழக்கிழமை 10.05.2018 அன்று ஒருபயிற்சிப் பட்டறையைநடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர். அரங்கின் ஊடாக நாடக  படைப்புக்களையும் அதன் உருவாக்கமுறைகளையும்,மொழிப்பயன்பாட்டையும்ஊக்குவிக்கும் நோக்கிலேயே இப்பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More