Home இலங்கை நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் வாள்வெட்டு இருவர் கைது…

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் வாள்வெட்டு இருவர் கைது…

by admin

நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று காவற்துறையினர் தெரிவித்தனர். நாவற்குழியைச் சேர்ந்த இருவரே இன்று (12) சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர் என்றும் காவற்துறையினர்  கூறினர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூவர் எதிர் வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் கடந்த 7ஆம் திகதி திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அப்புத்துரை கிரிசன்  என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்டும் 23 வயதுடைய கிரிகேசன் காலில் படுகாயமடைந்தனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலுக்குள் வைத்தே அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More