Home இலங்கை பஸ் கட்டணங்களை உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

பஸ் கட்டணங்களை உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பஸ் கட்டணங்களை உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 6.56 வீதத்தில் பஸ் கட்டணங்களை உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் அடிப்படை பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை. எனினும் , பஸ் கட்டண அதிகரிப்பு தொகை திருப்திகரமாக அமையவில்லை எனத் தெரிவித்து பஸ் உரிமையாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தாம் எதிர்பார்த்த அளவு பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்ற காரணத்தினால் பணிப் புறக்கணிப்பு போராட்டமொன்றை நடத்த உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More