Home இலங்கை வட மாகாண ஆளுநருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்

வட மாகாண ஆளுநருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட மாகாண ஆளுநருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல் ஒன்றை அவரது அலுவலகத்தில் இன்று நடாத்தி இருந்தது. அதன் போது வடமாகாண சபை அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் தாம் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் அதனால் வைத்தியர்கள் உட்பட பல அரச அலுவலர்கள் தமது நிலுவைகளைப் பெற வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் வைத்தியர் சங்கத்தினர் ஆளுநரிடம் எடுத்துக் கூறினார்.

ஆளுநர் உடனடியாகவே மத்திய திறைசேரி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மேலதிகமாக 4 பில்லியன் பணம் வட மாகாண சபைக்கு பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் வட மாகாண பிரதம செயலாளருக்கு ஏற்கனவே இருக்கின்ற நிதியை உடனடியாக விடுவித்து வைத்தியர்களுக்குரிய கொடுப்பனவுகளை உடன் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்ததார்.

ஆளுநரின் உத்தரவையடுத்து வைத்தியர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம் எனவும் அவ்வாறு வழங்கப்படாத பட்சத்தில் தொடர் எதிர்வரும் 28ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்ட முடிவுக்கு நாம் தள்ளப்படுவது தவிர்க்க முடியாமல் போய் விடும் என மருத்துவ அதிகாரிகள் சங்க
வட மாகாணம் பிரதிநிதிகள் தெரிவித்தனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More