Home இலங்கை மஹிந்தவை மீளவும் அரியாசனத்தில் அமர வைக்க சிலர் கனவு காண்கின்றனர் …

மஹிந்தவை மீளவும் அரியாசனத்தில் அமர வைக்க சிலர் கனவு காண்கின்றனர் …

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மீளவும் அரியாசனத்தில் அமர வைப்பதற்கு சில கணவு காண்கின்றார்கள் என சமூக வலுவூட்டல் அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார். படைவீரர் நினைவு நிகழ்வு என்ற பெயரில் பாரியளவில் பொதுமக்களின் பணத்தை அரசாங்கம் விரயமாக்கவில்லை எனவும் அதனை ஆக்கபூர்வமான முறையில் படைவீரர்களின் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய  அவர்,  படைவீரர்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிடக் கூடும் என்ற போதிலும், படைவீரர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை குறைத்து மதிப்பீடு செய்துவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவை மீளவும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைத்துப் பார்க்க சிலர் ஆசைப்பட்டு கனவு காண்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More