Home இலங்கை 08 வருடமாக கல்லு வருகின்றது – பாடசாலையும் வீடுமாக இருக்கின்றோம்

08 வருடமாக கல்லு வருகின்றது – பாடசாலையும் வீடுமாக இருக்கின்றோம்

by admin

கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தவலந்தன்னை வேவண்டன் தோட்டத்தில் சுமார் 08 வருடங்களாக் மலையில் இருந்து பாரிய கற்பாறைகள் மக்களின் குடியிருப்புகளை நோக்கி வந்த வண்ணம் இருகின்றது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவை மேலும் அதிகமாக காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்கு 56 குடும்பங்களை சேர்ந்த 276 பேர் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இவ்வாறு மழைக்காலங்களில் கற்பாறைகள் உடைந்து வருவதால் இரவு வேளையில் இந்த மக்கள் அருகில் உள்ள வேவண்டன் தழிழ் வித்தியாலத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் பகல் வேலையில் வீடு திரும்புகின்றனர். இந்த நிகழ்வு தொடர்ந்து 08 வருடங்காக இடம் பெருவதாக பாதிக்கபட்ட மக்கள் கூறுகின்றனர்.

இதற்கு தீர்வாக பிறிதொரு இடத்தில் வீடுகள் அமைக்க நடவடிக்கை மேற்க் கொள்ளபட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் 20 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் இது வரைக்கும் குறிபிட்ட வீடுகளே அமைக்கபட்டுள்ளன. மிகுதியான வீடுகளையும் கூடிய விரைவில் அமைத்து தங்களின் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்விணை பெற்று தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் 36 வீடுகள் கட்டுவதற்;கான நடவடிக்கைகள் மேற்க் கொள்ளபட்டு வருவதாகவும் மேற்படி 56 வீடுகளையும் ஒரே இடத்தில் முறையாக கட்டுவதற்கு பொருத்தமான இடம் இப்பிரதேசத்தில் இல்லை என்பதும் பாரிய குறைபாடாக இஇருக்கினறது எனவும் சுட்டிக்காட்டியுள்ள குடியிருப்புகளை கூடிய விரைவில் கட்டி தந்து தம்மை இவர்களை பாதுகாப்பான இடத்தில் வாழவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More