Home இலங்கை ராஜபக்ஷவை ஆட்சிப்பீடம் ஏற்றினால் ஊடகவியலாளர்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்படும்…

ராஜபக்ஷவை ஆட்சிப்பீடம் ஏற்றினால் ஊடகவியலாளர்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்படும்…

by admin

இராணுவ ஆட்சியா ஜனநாயக ஆட்சியா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும் –  குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர, ஊடகங்களும் ஊடகவியலாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அடுத்த தேர்தலில் ராஜபக்ஷ வெற்றிபெற்றால், ஆதரவளித்த ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வர்” பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திஸாநாயக்க, இன்று (வெள்ளிக்கிழமை) கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அவர், இராணுவ பாணியிலான ஆட்சி அதிகாரம் நாட்டில் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது என ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் ஜனநாயக ஆட்சியா அல்லது இராணுவ ஆட்சியா ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More