Home இலங்கை அவன்கார்ட்டும், கோத்தாபய ராஜபக்ஸவும், துரத்தும் விசாரணையும்..

அவன்கார்ட்டும், கோத்தாபய ராஜபக்ஸவும், துரத்தும் விசாரணையும்..

by admin

சர்ச்சைக்குறிய அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு எதிர்வரும் 31ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அந்த மனு இன்று (25) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை வேறு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன திறந்த நீதிமன்றில் தெரிவித்தார். அதன்படி அந்த வழக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், “அவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தான் உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கு இலஞ்ச ஊழல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், அதன் காரணமாக தான் உள்ளிட்ட 08 பிரதிவாதிகளை விடுவிக்குமாறும் விடுத்த கோரிக்கையை நீதவான் நீதிமன்ற நீதிபதி நிராகரித்து தீர்ப்பளித்ததாகவும், இதனால் அந்த தீர்ப்பை செல்லுபடியற்றதாக்க கோரி மேல் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்படது.இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மறுஆய்வு மனுவை விசாரிக்காமல் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றின் தீர்ப்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகிய இரண்டும் சட்டவிரோதமானது என்றும் தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More