Home இலங்கை வடக்கை ஆளும் வாள்கள் – வவுனியா கூமாங்குளத்திலும் வாள் வெட்டு.. 

வடக்கை ஆளும் வாள்கள் – வவுனியா கூமாங்குளத்திலும் வாள் வெட்டு.. 

by admin

ஒருவர் காயம் பொருட்கள் சேதம்…

வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு (02.06.18) 9.00 மணியளவில்வாகனமொன்றில் சென்ற 15க்கு மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் நின்ற 32 வயதுடைய இளைஞன் மீது இவ்வாறு வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர். அத்துடன் சுமார் 7லட்சம் பெறுமதியான பணத்தினை கொள்ளையடித்துச் தப்பித்துச் சென்றுள்ளனர் எனவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது வீட்டினுள் யன்னல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த 2மாத கைக்குழந்தையை தாயார் கட்டிப்பிடித்து காப்பாற்றியுள்ளார்.   இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதேவேளை நேற்று தவசிகுளம் மற்றும் கூமாங்குளம் பகுதியில் இளைஞர் குழுக்கள் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 36 வயதுடைய சுந்திரமூர்த்தி என்பவர் மீது வாளால் வெட்டியதில், அவர் படுகாயமடைந்ததுடன், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More