Home இலங்கை வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில், தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி போராட்டம்….

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில், தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி போராட்டம்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்..

 

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உட னடியாக வெளியேற்றக்கோரி மருதங்கேணி மீனவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதன்போது “மீன்பிடி திணைக்களமே மீட்டுதா எம் வளத்தை”, “பிரதேச செயலகமே மீட்டுத்தா எம் கடல்வளத்தை”, “அதிகாரிகளே அத்துமீறிய கடற்றொழிலாளர்களிடம் அசமந்தம் காட்டாதே” போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை தாங்கியவாறும் தென்பகுதி மீனவர்கள் அடாத்தாக வாடிகளை அமைத்து தங்கியுள்ள இடத்திலிருந்து மருதங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக வந்து மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இதன் பின்னர் தென்பகுதி மீனவர்களின் அத்து மீறல்களிடமிருந்து தமது கடல்வளத்தை பாதுகாக்கும்படியும், தென்பகுதி மீனவர்களால் உருவாகப்போகும் வாழ்வாதார நெருக்கடியிலிருந்து தம்மை பாதுகாக்கும்படியும் கேட்டு மகஜர் ஒன்றிணை மருதங்கேணி பிரதேச செயலருக்கும்,யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கும் சேர்த்து மருதங்கேணி பிரதேச செயலரிடம் கையளித்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More