Home இலங்கை வட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் இனம் தெரியாதோரால் தீக்கிரை

வட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் இனம் தெரியாதோரால் தீக்கிரை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இனம் தெரியாத நபர்களால் தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது. வட்டுக்கோட்டையில் உள்ள குறித்த கல்வி நிறுவனத்திற்குள் நேற்று புதன்கிழமை இரவு உட்புகுந்த குழு ஒன்று தளபாடங்கள் மற்றும் கொட்டகைகள் என்பவற்றுக்கு தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.

குறித்த கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் எனும் சந்தேகத்தில் நேற்றைய தினம் மாலை வட்டுக்கோட்டை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு இருந்தார். அந்நிலையில் நேற்றைய தினம் இரவு குறித்த ஆசிரியர் கற்பித்த தனியார் கல்வி நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் வட்டுகோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More