Home சினிமா சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் , ரகுல் ப்ரீத்தி சிங்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் , ரகுல் ப்ரீத்தி சிங்

by admin

 
இளம் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றார். ரவிக்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான  `இன்று நேற்று நாளை’ என்ற திரைப்படம் வெளியானது.

காலத்தை கடந்து செல்வதை மையப்படுத்தி அறிவியல் திரைப்படமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு தனது அடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று நாளை வெளியிட இருப்பதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிக்குமார் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“இன்று நேற்று நாளை” வெளியாகி இன்றோடு மூன்றாண்டு நிறைவுற்றது! கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நிலப்பரப்பு தாங்கிவரும் அதிர்வுகளுக்கு காலப்பயணமே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது! நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை. நிச்சயம் நாளையை நமதாக்குவோம்! எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்!  என்று தெரிவித்துள்ளார்.

ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்க உள்ளார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பதுடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் கருணாகரனும் நடிக்கிறார்.  அத்துடன் ஏ.ஆர்.ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார்.  நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர்.

,
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More