Home உலகம் தெற்கு சூடான் உள்நாட்டுப் போரில் பெண்கள், சிறுமிகளை இராணுவ வீரர்கள் வன்புணர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவிப்பு

தெற்கு சூடான் உள்நாட்டுப் போரில் பெண்கள், சிறுமிகளை இராணுவ வீரர்கள் வன்புணர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவிப்பு

by admin

தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிராமங்கள் மீது அந்த நாட்டு ராணுவத்தினர் போர் நடவடிக்கையை முன்னெடுத்தபோது அங்குள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளை வன்புணர்வுக்குட்படுத்தியதாக ஐ.நா. குற்றம் சுமத்தியுள்ளது.

தெற்கு சூடானில் அரசாங்கத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்ற நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கிராமங்களை கைப்பற்றுவதற்காக அரச மற்றும் ஆதரவு படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்த சண்டையின்போது போர் விதிகள் மீறப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றநிலையில், அங்கு உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிராமங்கள் மீது அரச படைகள் மற்றும் அதன் ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தியதில் 232 பேர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலின்போது 120 பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படடதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனைட்டி மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த அராஜகங்களுக்கு மூன்று ராணுவ தளபதி அதிகாரிகளே பொறுப்பாளிகள் எனவும் ஐ.நா. விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More