Home சினிமா ‘சர்கார்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் ‘மெர்சல்’ படத்தின் பாடல்களை எழுதிய விவேக்கே எழுதியுள்ளார்.

‘சர்கார்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் ‘மெர்சல்’ படத்தின் பாடல்களை எழுதிய விவேக்கே எழுதியுள்ளார்.

by admin

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் ‘மெர்சல்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதிய பாடலாசிரியர் விவேக்கே எழுதியுள்ளார், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், பழ.கருப்பையா, யோகி பாபு, வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகின்ற நிலையில் யார் பாடல்களை எழுதுகின்றார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பாடலாசிரியர் விவேக் தனது ருவிட்டர் பக்கதில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘சர்கார்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதப்போகிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் போன்ற மாஸ்டர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். உறுதுணையாக இருக்கும் விஜய் சாருக்கு நன்றி. ஏ.ஆர்.முருகதாஸ் சார் வலுவான கதைக்களத்தில் பணிபுரிவதில் மகிழ்ச்சி. சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

‘மெர்சல்’ படத்தின் அனைத்துப் பாடல்களிலும் ஏ.ஆர்.ரஹ்மான் – விவேக் இணைந்து பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More