Home இந்தியா பலாத்கார வழக்கை வாபஸ் பெறுமாறு கன்னியாஸ்திரிக்கு பாதிரியார் மிரட்டல்

பலாத்கார வழக்கை வாபஸ் பெறுமாறு கன்னியாஸ்திரிக்கு பாதிரியார் மிரட்டல்

by admin


பலாத்கார வழக்கை வாபஸ் பெறுமாறு கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிக்கு பாதிரியார் ஒருவர் மிரட்டல் விடுக்கும் குரல்பதிவு   ஒன்று வெளியாகியுள்ளது. கேரளாவில் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயரான பிரான்கோ முலாக்கல் என்பவர் மீது அண்மையில் கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்கார முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், பலாத்கார புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவு குரல் கொடுத்து வரும் மற்றொரு கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாதிரியரர் ஒருவர் பேராயர் மீதான பலாத்கார முறைப்பாட்டினை வாபஸ் பெறுமாறு தொலைபேசியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது அதன் குரல்பதிவு   பல்வேறு செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில் இந்த குரல்பதிவு  வழக்குக்கு கூடுதல் ஆதாரமாக பயன்படும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More