Home இந்தியா கல்விக்கு வயதில்லை! 96 வயதில் ஆர்வமுடன் பரீட்சை எழுதிய கேரள மூதாட்டி

கல்விக்கு வயதில்லை! 96 வயதில் ஆர்வமுடன் பரீட்சை எழுதிய கேரள மூதாட்டி

by admin


முதியோர் கல்வி திட்டத்தில் கல்வி கற்று 96ஆவது வயதில் கேரன மூதாட்டி ஒருவர்  ஆர்வமுடன் பரீட்சை எழுதியுள்ளார். கல்விக்கு வயதில்லை என்ற நற் சிந்தனைக்கு முன்னுதாரணமாக இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.  இந்தியாவின் கேரள மாநிலத்தில் முதியோர் கல்வித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான பரீட்சையை மாநிலம் முழுவதும் உள்ள 40 ஆயிரம் முதியோர் எழுதியுள்ளனர். இதில் செப்பேடு, கனிச்சநல்லூர், அரசு தொடக்கப் பாடசாலையில் கார்த்தியாயினி அம்மா என்ற 96 வயது மூதாட்டி பரீட்சை எழுதியுள்ளார். இவர் இப் பரீட்சையை எழுதியவர்களில் அதிக வயது உடையவர் ஆவார்.

பரீட்சை மண்டபத்தில் கார்த்தியாயினி அம்மா பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது அவருக்கருகில் ராமச்சந்திரன் என்ற 76 வயது முதியவரும் பரீட்சை எழுதியுள்ளார். அவர் கார்த்தியாயினி அம்மாவின் விடைத்தாளை பார்த்து எழுதியமையால் பரீட்சை கண்காணிப்பாளர் பார்த்து கண்டித்தார்.

முதியோர் பரீட்சையில் முதலில் இடம்பெற்ற புத்தகங்கள் படிக்கும் பரீட்சையில் கார்த்தியாயினி அம்மா  30க்கு 30 முழு புள்ளிகளைப் பெற்றார்.  அத்துடன் எழுத்துப் பரீட்சையில் கோடிட்ட இடங்களை நிரப்புவது உள்ளிட்ட கேள்விகள் படித்த பாடங்களில் இருந்து வரவில்லை, தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டதாக கார்த்தியாயினி அம்மா குறைப்பட்டுக்கொண்டார்.
96 வயதாகும் கார்த்தியாயினி அம்மா இதுவரை சுகவீனம் காரணமாக வைத்தியசாலை சென்றதில்லை என தெரிவித்தார். கண் பார்வை குறைபாடுக்காக சத்திரகிச்சை மாத்திரம் இவர் செய்துள்ளார். கார்த்தியாயினி அம்மா தினமும் 4 மணி நேரம் நடைபயிற்சி செய்வதாகவும் இவரது ஆரோக்கியத்திற்கு இதுவே காரணம் என்றும் கூறுகிறார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More