Home இலங்கை ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் சடலம் மீட்பு

ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் சடலம் மீட்பு

by admin


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில், தியாவட்டவான் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் வாழைச்சேனை காவல்துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளதனையடுத்து இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள வாழைச்சேனை காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்டவர் 55 – 60 வயதிற்கு இடைப்பட்ட ஆண் என தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More