Home இலங்கை முல்லைத்தீவில் கைதிகள் தப்பியோடினர்…

முல்லைத்தீவில் கைதிகள் தப்பியோடினர்…

by admin


முல்லைதீவு நீதவான் நீதிமன்ற வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்ட 4 கைதிகள் நேற்று மாலை தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு கைதிகளே, வவுனியா சிறைச்சாலையில் இருந்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளை தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற கைதிகளைத் தேடி சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் காவற்துறையினர் இணைந்து விஷேடநடவடிக்கை ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவற்துறையினர் மற்றும் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More