Home இலங்கை எதிரிகளையும் மனம் இளக வைக்கும் மரணங்களும் இணைவுகளும்….

எதிரிகளையும் மனம் இளக வைக்கும் மரணங்களும் இணைவுகளும்….

by admin

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய சகோதரரான காலஞ்சென்ற சந்ரா ராஜபக்ஸவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள வீரகெட்டிய, மெதமுலன இல்லத்திற்கு இன்று (25.08.18) காலை பயணம்  செய்த ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ, கோத்தபாய ராஜபக்ஸ, உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, மேல் மாகாண சபை அமைச்சர் காமினி திலகசிறி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More