Home உலகம் மியன்மார்ராணுவ தளபதியின் முகப்புத்தக கணக்கு முடக்கம்

மியன்மார்ராணுவ தளபதியின் முகப்புத்தக கணக்கு முடக்கம்

by admin


ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட வெறுப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து முகப்புத்தக சமூக வலைத்தள நிறுவனமானது மியன்மார் ராணுவ தளபதியின் கணக்கை முடக்கி உள்ளது.  மியன்மாரில்; ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் இனத்தினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக பங்களாதேசுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவ தளபதி, தனிநபர்கள் மறும் அமைப்புகள் முகப்புத்தக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரம் செய்து வந்தனர்.  ரோஹிங்யா இனத்தையே அழிக்கும் வேலைக்கு ராணுவம் முகப்புத்தகத்தினை ஒரு தளமாக பயன்படுத்தப்படுவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் முகப்புத்தகத நிறுவனம், மியன்மார் ராணுவ தளபதியினதும் மற்றும் 19 தனிநபர்கள், அமைப்புகளின் கணக்குகளையும் முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More