Home இலங்கை மடு பிரதேசச் செயலாளர் பிரிவிலும் ‘1990’ அவசர அம்புலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க வேண்டும்…

மடு பிரதேசச் செயலாளர் பிரிவிலும் ‘1990’ அவசர அம்புலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க வேண்டும்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


இந்திய அரசின் நிதி உதவியுடன் ‘1990’ எனும் அவசர அம்புலன்ஸ் வண்டிச் சேவை கடந்த யூலை மாதம் 21 ஆம் திகதி வடமாகாண ரீதியில் வைபவமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட 20 அம்புலன்ஸ் வண்டிகளில் மன்னார் மாவட்டத்திற்கு என 3 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிக்கப்பட்டன.

குறித்த அம்புலன்ஸ் வண்டிகள் மன்னார் மாவட்டத்தில் மன்னார்,மாந்தை மேற்கு மற்றும் முசலி ஆகிய 3 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளன.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கான அம்புலன்ஸ் வண்டி மன்னார் காவல் நிலையத்திலும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கான அம்புலன்ஸ் வண்டி இலுப்பைக்கடவை காவல் நிலையத்திலும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கான அம்புலன்ஸ் வண்டி சிலாபத்துறை காவல் நிலையத்தில் இருந்தும் தமது சேவைகளை மேற்கொண்டு வருகின்றன.

எனினும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் குறித்த அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பிக்கப்படாமை தொடர்பில் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே மடு பிரதேச்ச செயலாளர் பிரிவில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னாருக்கு வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகளில் ஒன்றை மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் வைத்து சேவையினை மேற்கொள்ள அதிகாரிகள் முன் வர வேண்டும்.என மடு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More