86
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம், இன்று (09.09.18) மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 25 தினங்கள் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் முடிவுற்றது.
மாலை ஆரம்பமான பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்று முருகன் வள்ளி – தெய்வானை சமேதரராக வெளி வீதியுலா வந்தார்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love