Home இந்தியா டெல்லியில் – நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுக் கொலை..

டெல்லியில் – நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுக் கொலை..

by admin

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தலைமை காவலரான ராம் அவ்தார் என்பவர் இனம் தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  ஜேத்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவரை அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த ;குதலில் ராம் அவ்தார் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

தகவலறிந்து வந்த காவற்துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவற்துறை விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் தலைமை காவலர் ராம் அவ்தார் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டமை தலைநகர் டெல்லியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More