Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஜெனிவா செல்ல விசா மறுக்கப்பட்டது..

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஜெனிவா செல்ல விசா மறுக்கப்பட்டது..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

File Photo
கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்புப்போட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான விசா மறுக்கப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளனர்.

இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதிகோரி கடந்த 560 நாட்களாக போராடி வருவதாக தெரிவித்த அவர்கள்,தமக்கான தீர்வுகிடைக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும்.எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவது தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர்கள் குறித்த அலுவலகம் அமைக்கும் முன்பாகவே இது தொடர்பில் பேசப்பட்டதாகவும், 6000 ரூபா தமக்கு பெரிதல்ல எனவும், அதற்கு மேல் தமது பிள்ளைகள் பெறுமதியானவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More